shadow

ராஜீவ்காந்தி கொலையாளிக்கு 2 வார பரோல்: மதுரை ஐகோர்ட் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 8 பேர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பேரறிவாளன் மற்றும் நளினி ஆகிய இருவரும் பரோலில் வெளியே வந்தனர். இந்த நிலையில் கடந்த 26 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் என்பவரும் தனக்கு ஒருமாதம் பரோல் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் சற்றுமுன் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதன்படி ரவிச்சந்திரனுக்கு 2 வார பரோல் வழங்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு ரவிச்சந்திரனின் உறவினர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Leave a Reply