ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் ராஜமவுலியின் தந்தை
அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ரஜினியின் அடுத்த படத்தை எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இவர் ‘பாகுபலி’ மற்றும் சல்மான்கானின் ‘பஜ்ராங்கி பைஜான்’ ஆகிய படங்களின் கதாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ரஜினியை சந்தித்த கே.வி.விஜயேந்திர பிரசாத் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது ரஜினி, பாகுபலி படம் பிரமாதமாக இருப்பதாக பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் விஜயேந்திர பிரசாத்துக்கு பொன்னாடை போர்த்தியும் அவர் கெளரவித்துள்ளார்.
பின்னர் இருவரும் இணைந்து படம் எடுப்பது குறித்து பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து விஜயேந்திர பிரசாத்திடம் கேட்ட போது, ரஜினிசார் எனக்கு ஒரு படம் நடித்து தர இருக்கிறார். நான் கதை எழுதி இயக்குவேன். இது என் விருப்பம். இதற்கு ரஜினி சம்மதித்து இருக்கிறார்” என்று கூறியுள்ளார். ரஜினி-ரஞ்சித் படத்தை அடுத்து இந்த படம் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.