shadow

rajinikanthகோவை அருகே ஆசிரமம் ஒன்றுக்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்த், பூஜ்ய ஶ்ரீ தயானந்த சுவாமியை சந்தித்து ஆசி பெற்று ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில், சுவாமி தயனாந்த சரஸ்வதியின் அர்ஷ வித்யா குருகுலம் எனும் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி வருவது வழக்கம்.

இந்நிலையில் இன்று காலை ரஜினிகாந்த் இந்த ஆசிரமத்துக்கு வந்தார். இன்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்த ரஜினிகாந்த், அங்கிருந்து கார் மூலம் ஆனைக்கட்டியில் உள்ள அர்ஷ வித்ய குருகுலம் ஆசிரமத்துக்கு சென்றார்.

அங்கு பூஜ்யஶ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமியை சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற அவர், சில மணி நேரங்கள் ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து ஓரிரு மணி நேரம் அங்கு தியானத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. 

இதையடுத்து இன்று மதியம் ஆசிரமத்தில் இருந்து காரில் புறப்பட்டு விமான நிலையம் வரும் ரஜினிகாந்த், மாலை 4 மணியளவில் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். 

ரஜினி வருகை குறித்த தகவல் வெளியானால் ரசிகர்கள் பெருமளவில் கூடிவிடுவர் என்பதால், ரஜினியின் இந்த வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. 

லிங்கா பட விவகாரத்தில் ரஜினிக்கு வினியோகஸ்தர்களால் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ரஜினிகாந்த்தின் இந்த திடீர் ஆசிரம வருகை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply