shadow

அழிவுகாலம் வந்துவிட்டால் அப்படித்தான் பேசுவார்கள். ரஜினி குறிப்பிட்டது யாரை?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவரை தோல்வி அடைய செய்து மாநிலத்தில் இருந்தே வெளியேற்றுவோம் என்று இதுவரை எந்த அரசியல்வாதியும் கூறவில்லை. மாறாக அவர் கன்னடர் எனவே அரசியலுக்கு வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜக முத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி மற்றும் சீமான் ஆகியோர் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக சுப்பிரமணியம் சுவாமி நேற்று அளித்த பேட்டியில் ‘அவன் அரசியலுக்கு வரமாட்டான்’ என்று ஒருமையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கடும் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்த ரஜினி தனக்கு நெருக்கமானவர்களிடம், ‘வினாச காலே விபரீத புத்தி’ என தெரிவித்துள்ளார். இதற்கு அழிவுகாலம் ஆரம்பித்து விட்டதால் புத்தி விபரீதமாக யோசிக்கும் கெட்டதையே பேசும் என அர்த்தம். ஆனால், ரஜினி தன்னை ‘அவன்’ என விமர்சித்த சுப்பிரமணியன் சுவாமியை விமர்சித்தாரா அல்லது சீமான் போன்றவர்களை விமர்ச்சித்தாரா என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை

Leave a Reply