ரஜினி குறி வைக்கும் வாக்காளர்கள் யார்? ராஜதந்திர அரசியலா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தால் அதிமுக ஓட்டைப் பிரிப்பாரா? அல்லது திமுக ஓட்டை பிரிப்பாரா? என அரசியல் விமர்சகர்கள் ஒருபக்கம் விவாதம் செய்து கொண்டிருக்க ரஜினியின் ஒட்டுமொத்த திட்டமே வேறாக உள்ளது
கடந்த 50 ஆண்டுகளாக இந்து ஆதரவாளர்கள் மற்றும் பெரியார் ஆதரவாளர்கள் என்ற மோதல் நடந்து வருகிறது. இந்து கடவுள்கள் குறித்து பெரியாரின் ஆதரவாளர்களும் மற்றும் திராவிட கட்சிகளும் கேலியும் கிண்டலும் அவமரியாதையும் செய்துவரும் நிலையில் அதற்கு எதிராக ஒரு தீப்பொறியை பற்ற வைக்க வேண்டும் என்பதுதான் ரஜினிகாந்தின் திட்டமாக இருக்கிறது
இதற்கு அவர் துக்ளக் விழாவில் பயன்படுத்திக் கொண்டார். அவர் எதிர்பார்த்தது போலவே தற்போது தமிழகம் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. பெரியார் ஆதரவாளர்கள் ஒரு பக்கம், இந்து ஆதரவாளர்கள் இன்னொரு பக்கம் என பக்கமாக வாக்குகள் பிரிந்து தற்போது இந்து ஆதரவாளர்கள் அனைவரும் ரஜினிக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்
இதைத்தான் ரஜினி எதிர்பார்த்ததாகவும், இந்த ராஜதந்திர அரசியல் வாக்குகளாக மாறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Leave a Reply
You must be logged in to post a comment.