இரண்டே வருடத்தில் முடித்த சபதம்: ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
தான் திரையுலகில் நடிக்க வந்தபோது தனக்கு பல அவமானங்கள் ஏற்பட்டதாகவும் அந்த அவமானத்தை தாங்கிக் கொண்ட தான், 2 வருடத்தில் இதே திரையுலகில் பெரிய ஆளாக வாழ்ந்து காட்டுகிறேன் என்று சபதம் எடுத்ததாகவும், அந்த சபதத்தை சொன்னபடியே இரண்டே வருடத்தில் முடிந்ததாகவும் ரஜினிகாந்த் நேற்றைய தர்பார் இசை வெளியீட்டு விழாவின் போது தெரிவித்தார்
16 வயதினிலே’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது தனக்கு ஒரு மிகப் பெரிய தயாரிப்பாளர் வாய்ப்பு கொடுத்தார் என்றும், ஆனால் பணம் கொடுக்காமல் நடிக்க சொன்னதால் தான் நடிக்க மறுத்துவிட்டதாகவும், அப்போது அவர் தன்னை அவமானப்படுத்தியதாக கூறினார்
அந்த அவமானத்தோடு ஏவிஎம் ஸ்டூடியோவில் இருந்து வெளியே வந்த தான் இதே ஏவிஎம் ஸ்டூடியோவில் தான் மிகப் பெரிய ஸ்டாராக வந்து காட்டுவேன் என்று சபதம் எடுத்ததாகவும்,அந்த சபதத்தை இரண்டு ஆண்டுகளில் முடித்து அதே ஏவிஎம் ஸ்டூடியோவில் வந்து ஸ்டைலாக இறங்கியதாவும் ரஜினிகாந்த் கூறினார்
அதன் பின்னர் இந்த இரண்டு வருடங்களில் தன்னுடைய முன்னேற்றத்திற்கு தான் மட்டுமே காரணம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டதாகவும் அந்த ஆண்டிலிருந்துதான் தன்னுடைய உண்மையான வெற்றி ஆரம்பமானதாகவும் ரஜினிகாந்த் அவர்கள் தனது பேச்சில் குறிப்பிட்டார்
Leave a Reply
You must be logged in to post a comment.