சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளான நேற்று அவரது பெயரில் அவரது ரசிகர்கள் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஜினி அரசியலில் இறங்கி கட்சி ஆரம்பிப்பார் என்றும் கடந்த 25 ஆண்டுகளாக காத்திருக்கும் அவரது ரசிகர்கள் பொறுமையிழந்து அவருடைய அனுமதி இல்லாமலேயே அவரது பெயரில் கட்சியை நேற்று ஆரம்பித்து, கட்சி கொடியையும், கட்சி பெயரையும் அறிவித்துள்ளனர்.
திருப்பூர் ரஜினி ரசிகர்கள் ஆரம்பித்துள்ள கட்சியின் பெயர் சூப்பர்ஸ்டார்ஸ் மக்கள் கழகம். கடந்த 1990ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கம்தான் தற்போது அரசியல் கட்சியாக மாறியுள்ளது என்று அந்த கட்சியின் தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ் கூறியுள்ளார்.
மேலும் இந்த கட்சியில் ரஜினிகாந்தின் பெயரையோ, படத்தையோ பயன்படுத்துவது இல்லை என்றும், ரஜினிகாந்தின் பெயருக்கு எந்த வகையிலும் களங்கம் ஏற்படுத்தாமல் செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. புதிய கட்சியின் கொடியில், நீலம், வெள்ளை, சிவப்பு நிற மத்தியில் நட்சத்திரம் இடம் பெற்றுள்ளது. இதில் காந்திஜி, நேதாஜி, பெரியார், காமராஜர் படம் அச்சிடப்பட்டு உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.