சென்னையில் ரஜினி-விஜய் சந்திப்பு. என்ன பேசியிருப்பார்கள்?
சமீபத்தில் பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்புக்கு ரஜினிகாந்த் முழு ஆதரவு தெரிவித்தார். விஜய் இந்த முயற்சிக்கு ஆதரவு கொடுத்தாலும் இதனால் சாமான்ய மக்கள் படும் அவஸ்தைகளை தவிர்த்திருக்கலாம் என்று மத்திய அரசுக்கு கொட்டு வைத்தார்.
இந்நிலையில் சென்னை எம்.ஜி.ஆர்.பிலிம் சிட்டியில் இன்று ரஜினியும் விஜய்யும் எதிர்பாராமல் சந்தித்தனர். இருவரும் ரூபாய் நோட்டு பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளை பேசியதாக தெரிகிறது.
‘பைரவா’ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்புக்கு விஜய்யும், ‘2.0’ படத்தின் படப்பிடிப்புக்கு ரஜினியும் எம்ஜிஆர் பிலிம் சிட்டிக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.