திமுக நடத்தும் முக்கிய விழாவில் கமல்-ரஜினி?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவருமெ சமீபத்தில் அரசியல் புயலை கிளப்பிய நடிகர்களாக உள்ளனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை அடுத்து ஆட்சியை பிடிக்க இருவரில் ஒருவர் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது
இந்த நிலையில் ரஜினியின் அரசியல் வருகை மற்றும் கமலின் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் திமுக, இருவரும் தங்களுக்கு எதிரி இல்லை என்பதை மட்டும் இப்போதைக்கு காட்ட முடிவு செய்துள்ளது.
இருவரையும் கட்சிக்குள் அழைக்க முயற்சி செய்வது வீண் என்பது தெரிந்துள்ளதால், குறைந்தபட்சம் இருவருமே தங்கள் நட்பில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் முரசொலி பவள விழாவிற்கு ரஜினி, கமல்ஹாசனை அழைக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஒருவேளை இருவரும் இந்த விழாவில் கலந்து கொள்ள முடிவு செய்தால் அந்த விழா அனல் பறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.