shadow
உடனே வெளிநாட்டுக்கு போயிருங்க சிவகார்த்திகேயன். ரஜினி கண்டிஷன்
tamil-movies-sivakarthikeyan-press-meet-stills39‘ரெமோ’ நன்றி அறிவிப்பு விழாவில் சிவகார்த்திகேயன் அழுத அழுகை ரஜினிக்கு கேட்கும் அளவுக்கு பிரபலமாகியுள்ளது. சிவாவின் அழுகைக்கு காரணம் ரஜினியின் உறவினர்தான் என்பது அவருக்கு தெரியுமோ தெரியாதோ ஆனால் அவர் சிவகார்த்திகேயனுக்கு கூறிய ஆறுதல் உண்மையானது என்கிறது கோலிவுட் வட்டாரம்.
சிவகார்த்திகேயனுக்கு போன் செய்த ரஜினி, ‘இதையெல்லாம் இக்னோர் பண்ணுங்க சிவா…” 
“உங்களுக்கு எந்த நாடு பிடிக்கும்? அதை சொல்லுங்க” என்று கேட்டவர், “எந்த நினைப்பும் இல்லாமல் எல்லாத்தையும் தூக்கி இங்கேயே வச்சுட்டு குடும்பத்தோடு அந்த நாட்டுக்கு போங்க. பத்து நாள் கழிச்சி நீங்க திரும்பி வரும்போது எல்லாம் சரியாகியிருக்கும். அதுமட்டுமல்ல, குழந்தைகளும் குடும்பங்களும் விரும்புகிற இடத்தில் நீங்க இருக்கீங்க. மக்கள் ஒண்ணு நினைச்சிட்டா அதை யாராலும் தடுக்க முடியாது. சந்தோஷமா இருங்க. டென்ஷனை தலைக்கு ஏத்திக்க வேணாம்” என்றாராம்.
ரஜினியின் இந்த ஆறுதல் வார்த்தைகள் சிவகார்த்திகேயனுக்கு யானை பலத்தை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை!

 

Leave a Reply