அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானதும் கோலிவுட்டின் பல இயக்குனர்கள் வயிற்றெரிச்சலில் இருப்பதாக கோடம்பாக்கத்தில் செய்திகள் கசிந்து வருகிறது.
ஷங்கர், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த் ஆகியோர் ரஜினியின் அடுத்த படத்தை இயக்க வரிசையில் காத்திருக்கும்போது, இந்த லிஸ்ட்டில் இல்லாத ரஞ்சித்துக்கு ரஜினி படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் அதிர்ச்சியில் இருக்கின்றது சீனியர் இயக்குனர்களின் வட்டாரங்கள்.
இந்நிலையில் தனது லிங்கா’ படப் பிரச்சனையை முடித்து கொடுத்த கலைப்புலி எஸ்.தாணுவை தனது படத்திற்கு தயாரிப்பாளர் ஆக்கி நன்றிக்கடனை செலுத்தியதை அடுத்து, ஆஸ்கார் ரவிச்சந்திரனையும் கடனில் இருந்து காப்பாற்ற ரஜினி முயற்சி எடுத்து வருவதாக செய்திகள் வெளிவருகின்றது.
‘ஐ’ படத்தின் ஆடியோ விழாவிலேயே தனது நிலைமையை சொல்லி கால்ஷீட் கேட்ட ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு தற்போது உதவ ரஜினி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்காக நடித்து தர அவர் முடிவு செய்துள்ளதாகவும், ரஞ்சித், சுந்தர் சி ஆகியோர் இயக்கும் இரண்டு படங்களிலும் அவர் ஒரே நேரத்தில் நடிக்க முடுவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த செய்தி இதுவரை உறுதிப்படுத்தவில்லை எனினும் இந்த தகவலை நம்பத்தகுந்த வட்டாரங்கள் பரப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.