என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது: தர்பார்’ விழாவில் ரஜினிகாந்த்

ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்றைய தர்பார்’ ஆடியோ விழாவில் என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கை என்றும் வீண் போகாது என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

முதன்முதலாக தமிழகம் வந்தபோது ரயிலில் எடுத்த டிக்கெட்டை தான் தொலைத்து விட்டதாகவும் ஆனால் டிக்கெட் கலெக்டர் தன் மீது நம்பிக்கை வைத்து என்னை அனுப்பியதாகவும் என்மீது நம்பிக்கை வையுங்கள் என்று டிக்கெட் கலெக்டரிடம் தொழிலாளிகள் பரிந்துரை செய்ததாகவும் அந்த நம்பிக்கை வீண் போகவில்லை என்றும் கூறினார்

அதேபோல் பாலச்சந்தர் அவர்கள் என்மீது நம்பிக்கை வைத்து ரஜினிகாந்த் என்ற பெயரை தனக்கு வைத்ததாகவும் கலைஞானம் அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்து என்னை ஹீரோவாக்கியது ஆகியவை வீண் போகவில்லை என்றும் கூறினார்.

அதன் பின்னர் சுமார் 100 தயாரிப்பாளர்கள் தன்னை நம்பி முதலீடு செய்ததாகவும் தன்னை நம்பிய யாரும் இதுவரை நஷ்டத்தை சந்திக்க வில்லை என்றும், அதேபோல் என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கையும் வீண் போகாது என்று ரஜினிகாந்த் ரசிகர்களை நோக்கி கூறியபோது கரகோஷம் விண்ணை பிளந்தது

ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வர உள்ள நிலையில் ரசிகர்கள் தன் மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்தால் நல்ல ஆட்சி கிடைக்கும் என்பதை அவர் மறைமுகமாக கூறியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply