ரஜினி பட டைட்டில் அறிவித்த சிலமணி நேரங்களில் முளைத்தது பிரச்சனை. படக்குழுவினர் அதிர்ச்சி
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘லிங்கா’ படத்தின் பிரச்சனையே இன்னும் முடிந்ததா? முடியவில்லையா? என்று உறுதியாக தெரியாத நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கு நேற்றுதான் ‘கபாலி’ என்ற டைட்டிலை அதிகாரபூர்வமாக அந்த படத்தின் இயக்குனர் ரஞ்சித் அறிவித்தார். ஆனால் பெயர் அறிவிக்கப்பட்ட ஒருசில நேரங்களிலேயே அந்த டைட்டில் என்னுடையது என்று ஒரு தயாரிப்பாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் ஆரம்பமே அபசகுணமாகிவிட்டதை போன்ற ஒரு நிலை ‘கபாலி’ படத்திற்கு ஏற்பட்டுள்ளது.
மைசூரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் தயாரித்து அவரே கதாநாயகனாகவும் நடித்துக்கொண்டிருக்கும் படம் ஒன்றிற்கு கபாலி என்று வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காவ்யா என்ற நடிகை நடித்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது சில ஆண்டுகளாக எப்பொழுதெல்லாம் தயாரிப்பாளருக்கு பணம் கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் தொண்ணூறு சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாகவும் சமீபத்தில்கூட சென்னையில் படப்பிடிப்பு நடந்திருப்பதாக கூறுகின்றனர்.
ஆனால் கபாலி” என்ற பெயரை அவர் முறைப்படி புதுப்பிக்கவில்லை என்றும் ரஜினி படத்துக்கு கேட்டதும் அந்த டைட்டிலை கில்டில் கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து சிவகுமார் கூறியபோது, ‘ “நான் பல லட்சங்கள் செலவு செய்து படமெடுத்துக்கொண்டிருக்கிறேன், ஐநூறுரூபாய் கட்டி புதுப்பிக்க மாட்டேனா? நான் ரினியுவல் செய்யப்போகும்போதெல்லாம் அதை ஏற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டனர், இப்போது எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை” என்று கூறியுள்ளார். படமே தொடங்கவில்லை, இன்னும் ஒரு நாள் கூட படப்பிடிப்பு நடைபெறவில்லை. டைட்டில் அறிவித்த உடனேயே பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. இன்னும் என்னென்ன பிரச்சனைகள் உருவாகப்போகிறதோ? என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.