சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ திரைப்படம் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருந்ததாக முதலில் கூறப்பட்டாலும், ஒருசில விநியோகிஸ்தர்கள் லிங்கா படத்தால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதற்காக நஷ்ட ஈடு வேண்டும் என்றும் லிங்கா தயாரிப்பாளரிடமும் ரஜினியிடமும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் சிங்காரவேலன் என்ற விநியோகிஸ்தர் தலைமையில் சமீபத்தில் லிங்கா விநியோகிஸ்தர்கள் ஒருசிலர் உண்ணாவிரத போராட்டம் ஒன்றையும் நடத்தினர். மேலும் ரஜினிகாந்த் வீடு அருகே பிச்சை எடுக்கும் போராட்டமும் நடத்தவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இளையதளபதி விஜய் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘புலி’ படத்தின் குழுவினர்களுக்கு கடந்த வாரம் பிரியாணி விருந்து வைத்தார். இந்த விருந்தில் சிங்காரவேலனும் கலந்து கொண்டதால் லிங்கா தோல்வியை கொண்டாடவே விஜய் பிரியாணி போட்டதாக வதந்தி பரவியது. விஜய், சிங்காரவேலன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையதளங்களில் பரபரப்பாக வெளியானது.
இதையடுத்து நேற்று வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள் சிங்காரவேலனுக்கும், விருந்து வைத்த விஜய்க்கும் எதிராக நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். ‘தோல்வி என்று சொல்லி பிச்சை எடுக்கும் துரோகிகளுக்கும், விருந்து வைக்கும் துரோகிகளையும் கண்டிக்கிறோம்’ என்று அந்த போஸ்டரில் பரபரப்பான வாசகம் இடம்பெற்றுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.