கோவாவில் ரஜினி-விஜய் சந்திப்பா?
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பும், விஜய் நடித்து வரும் ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பும் தற்போது கோவாவில் வெவ்வேறு பகுதிகளில் நடந்து கொண்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் ஒரு ஒற்றுமையாக இந்த இரண்டு படங்களின் தயாரிப்பாளரும் கலைப்புலி எஸ்.தாணு என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி, விஜய் ஆகிய இரண்டு பெரிய நடிகர்களின் படப்பிடிப்புகள் கோவாவில் நடைபெற்று வருவதால் அங்குள்ள தமிழர்கள் படப்பிடிப்பு தளத்தில் குவிந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
‘கபாலி’ படத்தின் கோவா படப்பிடிப்பு இம்மாத இறுதியில்தான் நடைபெறவிருந்தது. ஆனால் சென்னையில் தற்போது மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் இங்கு எந்த வேலையும் நடக்காது என்பதால் கோவா படப்பிடிப்பை முன்கூட்டியே நடத்தி வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரஜினி, விஜய் சந்திப்பு கோவாவில் நடைபெறுமா? இருவரும் இணைந்து சென்னை வெள்ள நிவாரண பணிக்கு ஏதேனும் செய்வார்களா? என்பது குறித்த வதந்திகளும் டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
Leave a Reply
You must be logged in to post a comment.