‘பாகுபலி 2’ படத்தில் இணைந்த ரஜினி-விஜய் நாயகி
உலகம் முழுவதும் சக்கைபோடு போட்ட ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘பாகுபலி 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் ரஜினி, மற்றும் விஜய்யுடன் நடித்த பிரபல கதாநாயகி ஸ்ரேயா தற்போது இணைந்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’ மற்றும் விஜய் நடித்த ‘அழகிய தமிழ்மகன்’ உள்பட பல முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்த ஸ்ரேயா, ‘பாகுபலி 2’ படத்தில் பல்வேள்தேவன் கேரக்டரில் நடிக்கும் ராணாவுக்கு மனைவியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முதல் பாகத்தில் ராணாவின் மனைவி குறித்த எவ்வித காட்சிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ஏற்கனவே தமன்னா, அனுஷ்கா ஷெட்டி, ரம்யாகிருஷ்ணன் ஆகிய முன்னணி நடிகைகள் நடித்து வரும் நிலையில் தற்போது புதியதாக ஸ்ரேயாவும் இணைந்துள்ளது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘பாகுபலி 2’ திரைப்படம் வரும் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.