இந்தியாவின் அடுத்த பிரதமராக ஏகமனதாக தேர்தெடுக்கப்பட்டு பதவியேற்க இருக்கின்றார் நரேந்திரமோடி. மோடியின் பதவியேற்பு விழாவிற்கு தமிழகத்தில் ரஜினி மற்றும் விஜய்க்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் பிரச்சாரத்தின்போது ரஜினியை அவரது போயஸ் கார்டன் வீட்டிலேயே சந்தித்து பேசினார் மோடி. அதுபோல விஜய்யை கோவையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சந்தித்து பேசினார். இருவரும் அப்பொழுதே மோடி வெற்றி பெற்று பிரதமராகவேண்டும் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்து மறைமுக ஆதரவையும் கொடுத்தனர்.
இந்நிலையில் பாரதிய ஜனதா இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்று வரலாற்று சாதனை புரிந்துள்ளதால், மோடியின் பதவியேற்பு விழாவுக்கு ரஜினியும் விஜய்யும் அழைக்கப்பட்டுள்ளனர். இருவரும் வரும் 21ஆம் தேதி டெல்லி செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று விஜய் தனது அறிக்கை ஒன்றில், “தேசிய அளவிலும், தமிழக அளவிலும் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்ற நரேந்திர மோடிக்கும், ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியதோடு, இருவரும் உலக அளவில் சக்திமிகுந்த தலைவர்கள் என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.