மாநிலம் முழுவதும் முடக்கம்: முதலமைச்சரின் அதிரடி உத்தரவால் பரபரப்பு

கொரோனா வைரஸ் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் நுழைந்து உயிர் பலிகளை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று ராஜஸ்தான்

இந்த மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் அம்மாநிலத்தில் பெரும் பதற்றநிலை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அதிரடியாக மாநிலம் முழுவதும் முடக்க உத்தரவிட்டு உள்ளார். மார்ச் 31ம் தேதி வரை மாநிலம் முழுதும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறந்திருக்கும் என்றும் மற்ற கடைகள் அனைத்தும் மூடப்படும் என்றும் பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வரக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply