ராஜஸ்தான் த்ரில் வெற்றி! மும்பை அணியை வீழ்த்தியது
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய போட்டியில் மும்பை மற்றும் ராஜ்ஸ்தான் அணிகள் மோதிய நிலையில் ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று மும்பையை வீழ்த்தியது
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 167 ரன்கள் எடுத்தது. யாதவ் 72 ரன்களும், இஷான் கிஷான் 58 ரன்களும் எடுத்தனர்
இதன்பின்னர் வெற்றி பெற 168 ரன்கள் தேவை என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த அணியின் சாம்சன் 52 ரன்களும், ஸ்டோக்ஸ் 40 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியை அடுத்து ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்திய மும்பை அணியின் பந்துவீச்சாளர் ஆர்ச்சர் ஆட்டநாயகன் விருதினை வென்றார்
Leave a Reply
You must be logged in to post a comment.