shadow

7ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடந்த ஒரு போட்டியில் மிக எளிய இலக்கை அடைய முடியாமல் ராஜஸ்தான் அணி, ஐதராபாத் அணியிடம் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்து 9 விக்கெட்டுக்களை இழந்தது. ஷேன் வாட்சன் மற்றும் பாட்டியாவில் அபார பந்துவீச்சில் ராஜஸ்தான் அணியின் விக்கெட்டுக்கள் சொற்ப ரன்களுக்கு வீழ்ந்தது. கேப்டன் தவான் மட்டுமே ஓரளவிற்கு தாக்குபிடித்து 33 ரன்கள் எடுத்தார்.

மிக மிக எளிய இலக்கான 135ரன்களை விரட்டிய ராஜஸ்தான் அணி, முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே ரஹானேவின் விக்கெட்டை இழந்து தத்தளித்தது. அதன்பின்னர் வந்த பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். இறுதியில் ராஜஸ்தான் அணி,19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. புவனேஷ்குமார் 4 விக்கெட்டுக்களையும் ஸ்டெய்ன் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள்.

இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி 6 புள்ளிகளுடன் 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பஞ்சாப் அணி 12 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

Leave a Reply