ராஜபக்சே மீண்டும் இலங்கை அதிபர் ஆவாரா?
இலங்கையில் கடந்த 2015ஆம் ஆண்டு அதிபர் பதவியில் இருந்து வீழ்த்தப்பட்ட ராஜபக்சே மீண்டும் விரைவில் அதிபராகும் தருணம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அந்நாட்டில் வாழும் தமிழர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இலங்கையில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சே கட்சி அமோக வெற்றி பெற்றது. அதிபர், பிரதமர் கட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளன. எனவே வரும் பாராளுமன்ற தேர்தலிலும் ராஜபக்சே கட்சி வெற்றி பெற்று அவர் அதிபராகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சே கட்சி பெற்ற வெற்றி சிறிசேனா அரசுக்கு தலைவலியாக அமைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து இலங்கை அரசியல் விமர்சகர் கருத்து தெரிவிக்கையில், “ராஜபக்சேயின் தேர்தல் வெற்றி வியப்பை அளிப்பதாக அமைந்து உள்ளது. இது அதிபர் சிறிசேனாவுக்கு பிரச்சினைக்கு உரியதாக அமையும்” என்று குறிப்பிட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.