shadow

salmankhan and namal rajapakseசமீபத்தில் மிக பிரமாண்டமாக சல்மான்கானின் தங்கை அர்புதாவின் திருமணம் ஐதராபாத்திலும், வரவேறுபு மும்பையிலும் நடந்தது. இந்த திருமணம் மற்றும் வரவேற்பு விழாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரித்தனர்.

இந்நிலையில் சல்மான்கான் சகோதரி திருமணத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே ரகசியமாக கலந்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மும்பையில் நடந்த அர்புதாவின் வரவேற்பு நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்டியதாகவும், சல்மான்கானுடன் நடந்த அந்த சந்திப்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகவும், நமல் ராஜபக்சே டுவிட்டரில் தெரிவித்த கருத்து மூலம் இந்த தகவல் ஊடகங்களுக்கு தெரிய வந்துள்ளது. இந்த தகவல் காரணமாக தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். லட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களை காவு வாங்கிய ராஜபக்சேவுக்கு சல்மான்கான் அழைப்பு விடுத்தது தவறு என்று சல்மான்கானுக்கு கண்டனம் தெரிவித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply