5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: மீண்டும் விடுமுறையா?

5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என்பதால் மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றூம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

ஏற்கனவே குமரி அருகே வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply