5 மாவட்டங்களில் கனமழை: விடுமுறை உறுதி என தகவல்

இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கு கனமழை உறுதி என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் இந்த ஐந்து மாவட்டங்களிலும் விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
தமிழகத்திலுள்ள கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து நேற்று முதல் இந்த ஐந்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

அது மட்டுமன்றி சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெறுவடால் இன்று இரவு அல்லது நாளை காலை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் அவ்வப்போது பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தன என்பதும் அந்த விடுமுறையை சரிக்கட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply