ஜிம்பாவேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி. இந்தியா அபார வெற்றி
இந்தியா மற்றும் ஜிம்பாவே அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது. ஹராரேவில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னணி பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்ததால், ஜிம்பாவே அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 168 ரன்கள் எடுத்தது.
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ராகுலின் அபார சதத்தால் 42.3 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 100 ரன்கள் எடுத்த ராகுல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
நாளை இரு அணிகளுக்கு இடையேயான் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.