குடியுரிமை போராட்டத்திற்கு ஆதரவு இல்லை: ராகுல்காந்தி அதிர்ச்சி அறிவிப்பு
மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை போராட்டத்திற்கு எதிராக டெல்லி உள்பட இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடந்து வரும் நிலையில் பல இடங்களில் இந்த போராட்டம் வன்முறையாக மாறி உள்ளது. ஒரு சில இடங்களில் கலவரம் வெடித்து பேருந்து தீ வைப்புகள் ரயில்கள் தீ வைப்புகள் போன்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது
இந்த நிலையில் இந்த போராட்டம் குறித்து கருத்து கூறிய ராகுல் காந்தி ’கடுமையான சட்டங்களை எதிர்த்து போராட சத்தியாக்கிரகம் சிறந்த போராட்ட முறை என்றும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அமைதியான வழியில் போராடுபவர்களுக்கு மட்டுமே தனது ஆதரவு என்றும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அவர் வன்முறை மூலம் போராடுபவர்களுக்கு தனது ஆதரவு இல்லை என்பதை மறைமுகமாக தெரிவித்ததால் போராட்டக்காரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
Leave a Reply
You must be logged in to post a comment.