தமிழர்கள் மீது வேறு மொழிகள் மொழி திணிக்கப்படுகிறது. ராகுல்காந்தி குற்றச்சாட்டு
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார். மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்த ராகுல்காந்தி மீது வெற்று மொழிகளை மத்திய அரசு திணித்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.
கடந்த சில நாட்களாகவே தமிழ் மற்றும் தமிழர்கள் குறித்து பேசி வரும் ராகுல்காந்தி நேற்றைய பேச்சிலும் தமிழ் மொழியை குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு நவோதயா பள்ளிகள் மூலம் இந்தியை மீண்டும் திணித்து வருவதாக தமிழக அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இதுகுறித்து ராகுல்காந்தியும் தனது உரையில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் தமிழர்கள் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் மற்றும் ஆங்கில மொழியை மட்டுமே பயின்று வருவதால் வேறு எந்த மொழியும் தமிழகத்தில் திணிப்பது என்பது முடியாத விஷயம் என தமிழ் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.