ராகுல் காந்தியின் டுவிட்டரில் ஆபாச பதிவுகள். ஹேக்கர்கள் கைவரிசையா?
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியின் டுவிட்டர் கணக்கை 1.22 மில்லியன் பேர் ஃபாலோ செய்து வருகின்றனர். அவரும் அவ்வப்போது தனது கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று திடீரென ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கில் (@OfficeOfRG) காங்கிரஸ் கட்சி மற்றும் காந்தி குடும்பத்தினரை பற்றி ஆபாசமான பதிவுகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன்பின்னர் தான் ராகுல்காந்தியின் டுவிட்டரை ஹேக்கர்கள் ஹேக்கிங் செய்தது தெரிய வதது.
இதனையடுத்து உடனடியாக ஹேக்கர்களிடம் இருந்து இந்த டுவிட்டர் கணக்கு மீட்கப்பட்டு ஆபாச பதிவுகள் அழிக்கப்பட்டது. இந்தியாவின் முக்கிய தலைவர் ஒருவரின் டுவிட்டர் கணக்கே பாதுகாப்பின்றி இருப்பது குறித்து காங்கிரஸ் கட்சி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.