பா.ஜ.க. வெற்று வெற்றியை கொண்டாடுகிறது: ராகுல்காந்தி
கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும் பாஜகவை ஆட்சி அமைக்க அம்மாநில கவர்னர் அழைப்பு விடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது ஜனநாயகத்தின் கேலிக்கூத்து என்று அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் 104 எம்.எல்.ஏக்கள் மட்டும் வைத்து கொண்டு மெஜாரிட்டி இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்து அதை வெற்றியாகவும் கொண்டாடி வருவது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியபோது, கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாம நிலையிலும் பா.ஜ.க. ஆட்சி அமைத்திருப்பது அரசியலமைப்பின் கேலிக்கூத்து. இன்று பா.ஜ.க. வெற்று வெற்றியை கொண்டாடுவதாகவும், ஜனநாயகத்தின் தோல்வியை கண்டு இந்தியா துயரப்படுவதாகவும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலரை திடீரென காணவில்லை என்றும் மோடியின் கட்டுப்பாட்டில் அவர்கள் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.