டெல்லியில் ராகுல்காந்தி திடீர் கைது. பெரும் பரபரப்பு
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியும், டெல்லியின் துணை முதல்வரும் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளதால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தைக் பார்க்க ராகுல் காந்தி மருத்துவமனைக்கு சென்றபோது போலீசார் அவருக்கு அனுமதி தரவில்லை. ஆனால் போலீசாரின் எதிர்ப்பை மீறி அவர் மருத்துவமனைக்கு சென்றார்.
இதனையடுத்து டெல்லி காவல்துறையினரை பணி செய்ய விடாமல் இடையூறு செய்ததற்காக ராகுல் காந்தியை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராகுல் காந்தியை போலவே தற்கொலை செய்து கொண்ட ராணுவ வீரரின் சடலத்தை பார்க்கச் சென்ற டெல்லி துணை முதல்வர் சிசோடியாவையும் டெல்லி காவல்துறை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.