shadow

rahane 500இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்து படுதோல்வி அடைந்ததை அடுத்து இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பலருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜிம்பாவே சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான தோனி, விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின் ஆகியோர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ரஹானே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜிம்பாவே தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்த அணியில் ரகானே(கேப்டன்), மனோஜ் திவாரி, உத்தப்பா, அம்பதி ராயுடு, ஹர்பஜன், முரளி விஜய், கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே, அக்சர் படேல், கர்ண் ஷர்மா, ஸ்டூவர்ட் பின்னி, மோஹித் ஷர்மா, தவால் குல்கர்னி, புவனேஸ்வர் குமார், சந்தீப் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதில் 4 வருடங்களுக்கு பின் மீண்டும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட ஹர்பஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டில் மூன்று  ஒரு நாள் போட்டிகளிலும், இரண்டு 20 ஓவர்கள் போட்டிகளிலும் விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி ஜூலை 10ஆம் தேதியும், 2வது ஒருநாள் போட்டி ஜூலை 12ஆம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜூலை 14ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. ஜூலை 17 மற்றும் 19ஆகிய தேதிகளில் 20ஓவர்கள் போட்டி நடைபெறவுள்ளது.

Leave a Reply