ரகுராம் ராஜனுக்கு ஆதரவு குவிகிறது. பதவி நீட்டிக்க அதிக வாய்ப்பு
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து ரகுராம் ராஜனை நீக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து குரல் கொடுத்த போதிலும் அவர் அந்த பதவியில் நீட்டிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
வரும் செப்டம்பர் மாதம் ரகுராம்ராஜனின் பதவிக்காலம் முடிகிறது. இந்நிலையில் ரகுராம் ராஜனை மீண்டும் அதே பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும் என பாஜக வட்டாரங்கள் விரும்புகின்றனர். அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது. அவரை நீக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி தவிர வேறு எந்த தலைவர்களும் கருத்து தெரிவிக்கவில்லை.
ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆன்லைனில் கையெழுத்து வேட்டையை சேஞ்ச்.ஓஆர்ஜி என்ற நிறுவனம் நடத்தியது. இதில் 60 ஆயிரம் பேர் ராஜனுக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர். இதில் பெங்களூருவைச் சேர்ந்த ராஜேஷ் பலாரியா என்பவர் மேற்கொண்ட ஆன்லைன் கையெழுத்து மனுவில் 57 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு வேண்டாம் என்று வெறும் 15 பேர் மட்டுமே கையெழுத்திட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.
Raguram Rajan post may be extended: Chennai Today News
இன்னும் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. சு.சுவாமிக்கு ரகுராம் ராஜன் பதிலடி
Leave a Reply
You must be logged in to post a comment.