எம்பி ஓய்வூதியம் பெறும் தினகரனுக்கு எம்.எல்.ஏ சம்பளம் தேவையா?
சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்ற டிடிவி தினகரன், எம்.எல்.ஏக்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் தனக்கு தேவையில்லை என்றும், பழைய சம்பளமே போதும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் தினகரனின் இந்த அறிவிப்பு குறித்து ஆ.கே.நகர் மக்கள் கூறியபோது ஏற்கனவே அவர் முன்னாள் லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினர் என்பதால் அதன் ஓய்வூதியத்தை பெற்று வருகிறார். அப்படி இருக்கும் போது அவர் உயர்த்தப்பட்ட சம்பளத்தை மட்டும் மறுக்காமல், எம்.எல்.ஏவின் முழு சம்பளத்தையும் வாங்க மறுத்திருக்கலாம்’ என்று கூறுகின்றனர்.
மேலும் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ஆர்.கே.நகருக்கே குடிவந்து இந்த தொகுதி மக்களுக்கு சேவை செய்வதாக கூறிய தினகரன் இதுவரை இரண்டு முறை மட்டுமே தொகுதிக்கு வந்துள்ளார். அதுவும் நன்றி அறிவிப்பு என்ற பெயரில் ஒருசில நிமிடங்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் என்று ஆர்.கே.நகர் மக்கள் புலம்பி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.