shadow

மீண்டும் ஆட்சியை பிடிக்கின்றது அதிமுக. புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு

jayalalithaதமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் முக்கிய ஊடகங்கள் தங்களுடைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. சமீபத்தில் தினமலர் மற்றும் நியூஸ் 7 வெளியிட்ட கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என கூறியது. ஆனால் நேற்று வெளியான APT மற்றும் புதிய தலைமுறை எடுத்த கருத்துக்கணிப்பின்படி அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறியுள்ளது. இதனால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

APT மற்றும் புதிய தலைமுறை எடுத்த கருத்துக்கணிப்பில் அ.தி.மு.க கூட்டணி 164 இடங்களிலும், தி.மு.க கூட்டணி 66 இடங்களிலும் வெற்றி என்றும் மீதியுள்ள நான்கு தொகுதிகள் மக்கள் நலக்கூட்டணிக்கு சேரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு மட்டுமின்றி அனைத்து கருத்துக்கணிப்புகளுமே மக்கள் நலக்கூட்டணி போட்டியிலே இல்லை என்பதைதான் வலியுறுத்தி வருகிறது.

புதிய தலைமுறை எடுத்த விரிவான கருத்துக்கணிப்பின் விபரங்கள் பின்வருமாறு:

puthiya02 puthiya03 puthiya04 puthiya05 puthiya07 puthiya08

Leave a Reply