shadow

1aபஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மாக்ஸ்வெல் வானவேடிக்கை நடத்தி 38 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.

டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்த சென்னை அணி, பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. சேவாக் 30 ரன்களும், மாக்ஸ்வெல் 90 ரன்களும், மில்லர் 47 ரன்களும், பெய்லி 40 ரன்களும் எடுத்தனர்.

232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, முதல் ஓவரிலேயே ஸ்மித் விக்கெட்டை இழந்தது. பின்னர் ஆடிய மெக்கல்லம் 33 ரன்களும், ரெய்னா 35 ரன்களும், டிபிளஸ்ஸிஸ் 52 ரன்களும், தோனி 23 ரன்களும் எடுத்தனர். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 187 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

சென்னை அணியின் இரண்டு தோல்விகளும் பஞ்சாப் அணிக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி மீண்டும் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்றது. மாக்ஸ்வெல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக நேற்று நடந்த முதல் போட்டியில் டெல்லி அணியை கொல்கத்தா அணி வீழ்த்தியது. டெல்லி அணி 160 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா 18.2 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Leave a Reply