shadow

5அ7வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று இரவு நடந்த பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டி ஒன்றில் பஞ்சாப் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, முதல் நான்கு வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 198 ரன்கள் குவித்தது. மில்லர் 66 ரன்களும், சேவாக் 30 ரன்களும் எடுத்தனர்.

199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை விரட்டிய பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா அபாரமாக பந்துவீசி, முதல் மூன்று பேட்ஸ்மேன்களை சுருட்டியதால், பஞ்சாப் அணி எளிய வெற்றி பெற்றது. சந்தீப் சர்மா ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் 14 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 6 புள்ளிகளுடன் பெங்களூர் அணி 6வது இடத்திலும் உள்ளது.

Leave a Reply