shadow

ஐபிஎல் 2018: முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் எடுத்த ரன்கள்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கட்ந்த சில நாட்களாக விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதி வருகின்றன.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது. கெயில் 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.

மும்பை அணியின் பந்துவீச்சாளர்களான மெக்லெங்கன், பும்ரா, பாண்ட்யா, மார்க்கண்டே மற்றும் கட்டிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்

இந்த நிலையில் 175 என்ற இலக்கை நோக்கி மும்பை அணி தற்போது விளையாடி வருகிறது. சற்றுமுன் வரை மும்பை அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் எடுத்துள்ளது.

Leave a Reply