shadow

facebookகுற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதே அவர்கள் தண்டனை காலத்தில் தாங்கள் செய்த தவறை நினைத்து வருந்தி திருந்துவதற்காகத்தான் என்ற நிலைமை மாறி பணம் இருந்தால் போதும் சிறையிலும் சொகுசு வாழ்க்கையை வாழலாம் என்பதை நிரூபிக்கும் பல சம்பவங்கள் நாட்டில் நடந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஐந்து குற்றவாளிகள் சிறையில் ஒய்யாரமாக உட்கார்ந்து கொடுத்த போஸ்கள் அடங்கிய புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் வெளிவந்துள்ளன.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டிண்டா என்ற சிறையில் காவல்துறையினர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஐந்து குற்றவாளிகள் விலைமதிப்புள்ள செல்போன்களுடன் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பர்சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் ஒன்றாக எடுத்த புகைப்படங்கள் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஐந்து குற்றவாளிகளும் தனித்தனியே பிரிக்கப்பட்டுவிட்டாலும் இன்னும் அவர்களிடம் இருந்து செல்போன்களை சிறை அதிகாரிகள் கைப்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.

Leave a Reply