shadow

தங்கச்சட்டை புகழ் புனே தொழிலதிபர் படுகொலை. யார் காரணம்?

gold shirtகடந்த 2013ஆம் ஆண்டு புனேவை சேர்ந்த தொழிலதிபர் தத்தாரே புகே ரூ.1.2 கோடி மதிப்புள்ள தங்கத்தினால் ஆன சட்டை அணி பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். தங்கச்சட்டை அணிந்த அவருடைய புகைப்படம் சமூக இணையதளங்களில் வைரலாகி இவர் இந்தியா முழுவதும் பாப்புலர் ஆனார்.

இந்நிலையில் நேற்று இரவு தனது நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள மகனுடன் சென்ற தத்தாரே புகேவை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடுமையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் புனேவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை குறித்து உள்ளூஅர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பண பரிவர்த்தனை தொடர்பான பிரச்சனையில் இவரை யாராவது அடித்துக் கொன்றிருக்கலாம் என்று கருதும் போலீசார், சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply