ஐபிஎல் கிரிக்கெட் 2017: புனே அணி த்ரில் வெற்றி. மும்பை போராடி தோற்றது
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் புனே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச முடிவு செய்ததால் புனே அணி முதலில் களமிறங்கியது. 20 ஓவர்களில் புனே அணி 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. திரிபாதி 45 ரன்களும், ரஹானே 38 ரன்களும் எடுத்தனர்.
161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய மும்பை அணி ஆரம்பத்தில் அதிரடியாக ஆடினாலும் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்கள் விழுந்தன. கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த ஓவரில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 14 ரன்கள் மட்டுமே எடுத்ததால் மும்பை அணி தோல்வி அடைந்தது., ஆட்டநாயகனாக புனே அணியின் ஸ்டோக்ஸ்தேர்வு செய்யப்பட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.