shadow

‘புலி’ அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து. விஜய் ரசிகர்கள் மறியல்

vijayவிஜய் நடித்த ‘புலி’ திரைப்படத்தின் அதிகாலை மற்றும் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடிகர் விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து ஒருசில இடங்களில் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று அதிகாலை 5மணி மற்றும் 9 மணிக்கு திரையிடப்படுவதாக திட்டமிட்டிருந்த ‘புலி’ படத்தின் சிறப்புக் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால், அந்த படத்தை காண முன்கூட்டியே ஆன்லைனில் புக்கிங் செய்திருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. தியேட்டர் உரிமையாளர்கள் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டாலும், விஜய்யின் புலி படம் திரையிடாததால் சென்னை உள்பட பல நகரங்களில் விஜய் ரசிகர்கள் மறியல், போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வருமான வரித்துறையினர் நேற்று முதல் புலி திரைப்பட குழுவினர் வீடுகளில் சோதனை நடத்தி வருவதால், ரொக்கம் மற்றும் வங்கிகளில் உள்ள பணங்கள் முடக்கப்பட்டுள்ளதால், கியூப் நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்தாததால் சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அனைத்து பிரச்சனைகளும் விஜய்யே நேரடியாக களத்தில் இறங்கி தீர்வு செய்துவிட்டதால், அனைத்து நகரங்களில் ‘புலி’ படம் இன்னும் சற்று நேரத்தில் திரையிடப்படவுள்ளது.

Leave a Reply