விஜய் நடித்து வரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா என விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் விநியோக உரிமையின் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே ‘புலி’ படத்தின் வெளிநாட்டு உரிமை மிகப்பெரிய தொகைக்கு வியாபாரமாகிவிட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் கர்நாடக மாநில உரிமையும் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகிவிட்டதாக டுவிட்டரில் செய்தி வெளியாகியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தின் பிரபல இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், மற்றும் விநியோகிஸ்தராக விளங்கி வரும் எஸ்.நாராயணன் ‘புலி’ படத்தின் கர்நாடக மாநில உரிமையை பெற்றுள்ளார். தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற உள்ளத்தை அள்ளித்தா, நாட்டாமை, சூரிய வம்சம், மைனா போன்ற பல படங்களை இவர் கன்னடத்தில் ரீமேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.‘புலி’ படத்தின் சென்னை படப்பிடிப்பு இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் விரைவில் கேரளா செல்லவுள்ளனர். விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், பிரபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘புலி’ படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தை பி.டி.செல்வகுமார் மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.