இன்று முதல் பேருந்து கட்டணங்கள் மீண்டும் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி
கடந்த 20ஆம் தேதி நள்ளிரவு முதல் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தமிழக அரசு பேருந்து கட்டணங்களை உயர்த்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தமிழக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பேருந்து கட்டண உயர்வுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளின் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று முதல் புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு வந்து செல்லும் பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளது. இதனை புதுச்சேரி போக்குவரத்து கழகம் உறுதி செய்துள்ளது.
இதன்படி புதுச்சேரியிலிருந்து சென்னைக்குக் ஈசிஆர் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகளுக்கான கட்டணம் 100 ரூபாயிலிருந்து 145 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் புதுச்சேரியிலிருந்து மற்ற அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்கு இயக்கப்படும் புதுச்சேரி அரசுப் பேருந்துகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வால் புதுச்சேரியில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு அடிக்கடி சென்றுவரும் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.