shadow

கைதாகும்போது செல்பி எடுத்த பேருந்து போராட்ட இளைஞர்கள்

தமிழக அரசு கடந்த 20ஆம் தேதி பேருந்து கட்டணத்தை சுமார் 60% வரை உயர்த்தியது. இருப்பினும் நேற்று முதல் கட்டணம் சிறிதளவு குறைக்கப்பட்டிருந்தாலும் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் ராமநாதபுரத்தில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நடந்த போராட்டம் ஒன்றில் பங்கேற்ற இளைஞர்கள் கைதானபோது , போலீஸ் வாகனம் முன்பு செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இந்த செல்பி புகைப்படங்கள் ஒருசில நிமிடங்களில் சமூக வலைத்தளங்களில் லைக்குகள் மற்றும் ஷேர்களுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply