shadow

நிர்மலாதேவிக்கு ஏப்ரல் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிமன்றம் உத்தரவு

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் பேராசிரியை கைது செய்யப்பட்டு அவரிடம் போலீசார் விசாரணை செய்த நிலையில் நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார், அப்போது அவரை ஏப்ரல் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்ட நிர்மலாதேவியை போலீசார் கைது செய்து அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. மேலும் ஓங்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழு இதுகுறித்து விசாரணை செய்யும் என தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி இன்று மாலை விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏப்ரல் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து நிர்மலாதேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply