பிரியங்கா காந்திக்கு டெங்கு காய்ச்சல்: டெல்லி மருத்துவமனையில் அனுமதி
டெங்கு காய்ச்சலால் நாடு முழுவதும் பொதுமக்கள் கடும் அவதியில் இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவியின் மகள் பிரியங்கா காந்தியையும் இந்த டெங்கு விட்டுவைக்கவில்லை.
பிரியங்கா காந்தியை டெங்கு காய்ச்சல் தாக்கியதாகவும், அதன் காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து வெளிவந்த செய்தியில் டெல்லியிலுள்ள கங்காராம் மருத்துவமனையில் பிரியங்கா காந்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் அவருடைய உடல்நிலை தற்போது தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, சகோதரர் ராகுல் காந்தி ஆகியோர் மருத்துவமனையில் பிரியங்கா காந்திக்கு துணையாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.