விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடித்து கொண்டிருக்கின்றார். இந்த படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தற்போது ஆந்திராவில் நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளது.

இந்த படத்தை அடுத்து விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். காதல் மற்றும் காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ப்ரியங்கா சோப்ரா நடிக்க உள்ளார். விஜய்யின் தமிழன் படத்தில்தான் ப்ரியங்கா சோப்ரா அறிமுகம் ஆனார் என்பதால் மிக எளிதில் அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இதை உறுதிப்படுத்துவதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மும்பை சென்ற இயக்குனர் சிம்புதேவன், ப்ரியங்கா சோப்ராவை நேரில் சந்தித்தார்.

ஆனால் கதையை கேட்ட ப்ரியங்கா, இந்த கதையில் ஹீரோவுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் இருக்கின்றது. கதைப்படி ஹீரோயினுக்கு காட்சிகளை அதிகரித்தால் மட்டுமே தன்னால் நடிக்க முடியும் என்று கூறிவிட்டாராம். இதைக்கேள்விப்பட்ட விஜய் டென்ஷன் ஆகாமல் ப்ரியாங்காவின் கேரக்டரையும் கொஞ்சம் டெவலப் செய்யுங்கள் என பெருந்தன்மையுடன் கூறினாராம். ப்ரியங்காவின் பேச்சினால் அதிர்ச்சியடைந்து இதனால் பெரிய பிரச்ச்னை ஏற்படும் என பயந்த சிம்புதேவனுக்கு விஜய்யின் கருத்தை கேட்டதும்தான் நிம்மதி ஏற்பட்டதாம். ப்ரியங்கா சோப்ராவிற்காக கதையில் சில மாற்றங்களை செய்து வருகிறார் சிம்புதேவன்

Leave a Reply