வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் பிரகாஷ்ராஜுக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த திரைப்படம் ‘காஞ்சிவரம். இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிய இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி இருவரும் நடித்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் பிரியதர்ஷன் இயக்கத்தில் இதே ஜோடி ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
முந்தைய படத்தில் பட்டு நெசவு தொழிலாளர்களின் முக்கிய பிரச்சனைகளை நெகிழ்ச்சியுடன் கொடுத்த பிரியதர்ஷன், இந்த புதிய படத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த திரைக்கதையை அமைத்துள்ளார்.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சாபுசிரில் கலை இயக்குனராகவும், பீனா பால் படத்தொகுப்பாளராகவும் பணிபுரியவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 21ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
காதல், காமெடி மற்றும் ரம்மியமான பாடல்கள் ஆகியவற்றுடன் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த மெசேஜையும் பிரியதர்ஷன் இந்த படத்தில் கூறவுள்ளதாகவும், இந்த படத்தின் கிளைமாக்ஸ் படம் பார்ப்போரை உருக வைப்பதாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.