முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கவலைக்கிடம்:
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த 2 மாதங்களாக சிறுநீரக தொற்று நோய் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், அவருக்குத் தற்போது உயிர் காக்கும் உபகரணங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை குறித்து விசாரிக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேற்று சென்று மருத்துவர்களிடம், வாஜ்பாயின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
கடந்த 1998ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை இந்திய பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.