shadow

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மனைவிக்கு திடீர் உடல்நலக்கோளாறு. மருத்துவமனையில் அனுமதி

pranab
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா அவர்களுக்கு இன்று திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக இந்திய ராணுவ மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மனைவியின் உடல்நிலை குறித்த செய்தி அறிந்தவுடன் இரண்டு நாள் பயணமாக ஒடிஸாவுக்கு சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தனது பயண நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு நேற்று நள்ளிரவு புதுடில்லி திரும்பினார். புதுடில்லி வந்தடைந்ததும் அவர், நேரடியாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மனைவியின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இன்று அவர் ஒடிசாவில் உள்ள கட்டாக்கில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply